ரணிலுக்கு சென்ற அவசர கடிதம்
மக்கள் அங்கிகரிக்கக்கூடிய அரசாங்கத்தை அமைத்து நிவாரணங்களை வழங்குமாறு முன்னாள் சபாநாயகரும், சமூக செயற்பாட்டாளருமான கருஜயசூரிய உள்ளிட்ட 155 சிவில் சமூகப்பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரு ஜயசூரிய தலைமையிலான 155 பேர் இன்று அவசர கடிதம் ஒன்றின் மூலம் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நாட்டு மக்கள் மீதான அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும், 20ஆவது திருத்தச்சட்டத்தை உடனடியாக நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ளுமாறு எழுத்து மூலமான கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் மீதும் அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீதும் தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் தற்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், இதற்கும் பொதுமக்கள் மத்தியில் அதிகமான எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை