ரத்கம வர்த்தகரிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள்!

ரத்கம விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் பலபிட்டிய பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 225 மி.மீ அளவிலான 9 தோட்டாக்களுடன் 2 துப்பாக்கிகள், கைத்தொலைப்பேசி மற்றும் பென் ட்ரைவ் என்பனவற்றுடன் சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

பலபிட்டிய ரயில் நிலைய சந்தை வீதியில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் படகுச் சேவை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான உணவகம் ஒன்றை நடத்தி வருவதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.