கண்டி – மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூடப்பட்டது !

பலத்த மழையினால் மண்மேடு சரிந்து வீழ்ந்ததையடுத்து கண்டி – மஹியங்கனை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, 18ஆவது வளைவு வீதி மூடப்பட்டுள்ளது.

அத்துடன் மண்சரிவு காரணமாக 13 மற்றும் 14ஆவது வளைவுகளுக்கு இடையில் வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

மேலும், ரந்தெனிகல – பதுளை வீதியோ அல்லது ரஜ மாவத்தை, தென்னகும்புர மணிக்கூட்டு கோபுர சந்திக்கு அருகில் வந்து சந்தி 21இல் இடப்புறமாக வாகனத்தை செலுத்தி பதுளை – மஹியங்கனை வீதியினூடாக மஹியங்கனை நகரை அடையலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.