இலங்கை தொடர்பில் சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் முக்கிய அறிவிப்பு

இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கான திட்டத்தினை எதிர்வரும் 20 ம் திகதி சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர்களிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

தீர்க்கமான கொள்கைமுடிவுகளை எடுத்து இந்தியா சீனா பாரிஸ் கிளப் உட்பட முக்கிய கடன் வழங்குநர்களின் நிதி உத்தரவாதத்தை பெற்றதன் மூலம் இந்த விடயத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 20ம் திகதி இலங்கை தொடர்பான திட்டத்தை நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.