சர்வதேச ஈர நில தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இயற்கை நடைபயணம்
சர்வதேச ஈர நில தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவருக்கான களப்பயணம் ஒன்று இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர் ம.சசிகரனின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது எதிர்காலத்துக்கான சுற்றுச்சூழல் கழகமும் சிறகுகள் அமையமும் இணைந்து யாழ். செம்மணி பகுதியில் அமைந்துள்ள ஈரநிலப் பிரதேசத்துக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் ஈரநிலத்தில் வாழும் சிற்றுயிர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என்பவற்றை அவதானிக்க புலமை மிக்க வளவாளர்களால் வழிகாட்டப்பட்டனர்.
இங்கு மாணவர்களுக்கு ஈர நிலங்களின் முக்கியத்துவம், ஈர நிலங்கள் பாதுகாக்கப்படுவதில் ஒவ்வொரு தனி மனிதனதும் பங்களிப்பு என்பன எடுத்துக்கூறப்பட்டது.
இந்த ஈரநிலத்துக்கான இயற்கை நடைபயணத்தில் மாணவர்கள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வயது வேறுபாடின்றி ஆர்வத்தோடு பங்கேற்றனர்
கருத்துக்களேதுமில்லை