கொரோனா காலத்தில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்துள்ள இரு முதலைகள்- ஒன்று பிடிபட்டது!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடுவில் மக்களின் குடியிருப்புக்குள் புகுந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாலமீன்மடு, தண்ணிக்கிணற்றடி வீதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த முதலையே இவ்வாறு இன்று (புதன்கிழமை) பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலை மக்களின் குடியிருப்புகளுக்குள் புகுந்து ஆடு, கோழிகளை பிடித்துவந்த நிலையில் இன்று அதிகாலை குடியிருப்புக்குள் வைத்து குறித்த முதலையினை அப்பகுதி இளைஞர்கள் பிடித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இரண்டு முதலைகள் இவ்வாறு பிரதேசத்தில் நடமாடித் திரிவதாகவும், மற்றைய முதலையையும் பிடிக்க நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். குறித்த முதலையானது சுமார் 7அடி நீளம் கொண்டதாகக் காணப்பட்டது.

அப்பகுதிக்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பதிகாரி கே.சுரேஸ் தலைமையிலான குழுவினர் குறித்த முதலையினை மீட்டு பாதுகாப்பாக நீர்நிலைக்குக் கொண்டுசென்று விடும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.