தேர்தலுக்குத் திகதி குறிப்பிட்டு மக்களை ஆபத்தில் தள்ளாதீர்கள் – தேர்தல் ஆணையாளரைக் கோரியது கூட்டமைப்பு…

கொரோனா வைரஸ் அபாயம் நீங்கி விட்டதாக உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதி நிர்ணயிப்பதை தவிர்க்கும்படி, தேர்தல்கள் ஆணையாளரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கேட்டுக் கொண்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர்கள் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையெழுத்திட்டு, இன்று (18) மாலை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பிய நீண்ட கடிதத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலைகளில் தேர்தலை நடத்துவது மிகவும் ஆபத்தானது மற்றும் பொறுப்பற்றது. இந்தச்  சூழ்நிலைகளில், ஒரு திகதியை நிர்ணயிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்தக்  கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலின் முன்னதாக மக்களைக் கூட்டி தேர்தல் பிரசாரம் செய்வது, வாக்கெடுப்பில் மக்கள் கலந்துகொள்வது மக்களை ஆபத்தில் சிக்க வைத்து விடலாமென்பதையும் கூட்டமைப்பினர் எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன், முறையான தேர்தல் பிரசாரம் நிகழ்த்தப்பட்டு தேர்தல் நடத்தப்படுவதே முறையான ஜனநாயக நடைமுறை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.