அழகு நிலையங்கள் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதி இல்லை…

பாறுக் ஷிஹான்

சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ளமையினால்  சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன என என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட  கொரோனா தொற்று தொடர்பில்   தொடர்பாக வெளிவந்த செய்தி  தொடர்பாக வியாழக்கிழமை(23)  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

சுகாதார அமைச்சு வேறு நாடுகளில் இருந்து கற்றுக்கொண்ட விடயங்களிலிருந்து அல்லது வேறு நாடுகளில் தொற்று ஏற்பட்ட விதங்களில் பாடங்களை  கற்றுக் கொண்டு  சிகை அலங்கார நிலையங்களிலிருந்து தொற்றுகள் ஏற்படலாம் என்ற காரணம் பலமாக உள்ள காரணத்தினால் சுகாதார அமைச்சின் அறிவுரைக்கு அமைய எமது பிராந்தியத்திலும் சகல சிகை அலங்கார நிலையங்களும் அழகு நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் மக்களுக்கு தேவையான சேவைகளை வீடுகளுக்குச் சென்று மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் நாங்கள் சிகை அலங்கார நிலைய சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி இருந்தோம். அதனடிப்படையில் வீடுகளில் உள்ளவர்களின் துணிகளை பயன்படுத்தி சிகை அலங்காரத்தை மேற்கொள்ள முடியும். அதன் பின்னர் ஒவ்வொரு நபருக்கும் சிகை அலங்காரம் மேற்கொண்ட பின்னர் குறித்த சிகையலங்கார கருவிகள் அனைத்தும் சவர்க்காரம் மற்றும் தொற்று நீக்கும் கருவிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அறிவுரைகளையும் நாங்கள் வழங்கியிருந்தோம்.

இதனைத்தொடர்ந்து பொது போக்குவரத்து சம்பந்தமாக நாங்கள் பல தெளிவுகளை வழங்கிக் கொண்டிருக்கின்றோம் பொதுப் போக்குவரத்தில் பேருந்துகளில் 50 இருக்கைகளைக் கொண்ட பேருந்துகளில் 25 நபர்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு நாங்கள் அறிவுரைகளை வழங்கி இருக்கிறோம். அதுவும் ஒவ்வொரு இருக்கைகளிலும் ஒவ்வொரு நபர் மாத்திரம் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறோம். முச்சக்கர வண்டிகளில் சாரதி உட்பட இரு நபர் மாத்திரம் ஏற்றிச் செல்ல வேண்டும் ஏனைய கார் பேன் போன்றவற்றில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவு இருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கி இருக்கின்றோம் குறிப்பாக மோட்டார் சைக்கிள் கூட ஒரு நபரே பயணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கின்றோம் என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.