மனைவியின் சித்தப்பாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரும் ரோஹித்த ராஜபக்ச
பாலியல்துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தனது மனைவியின் வளர்ப்பு தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் மகன் ரோகித்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டுவிட்டரில் அவர் இதனை பதிவு செய்துள்ளார்.
கொழும்பின் ஐந்துநட்சத்திர விடுதியொன்றில் குறிப்பிட்ட நபர்கண்டித்தக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதை அறிந்து மனவேதனை அடைந்ததாக ரோகித டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நானும் எனது மனைவியும் பாலியல்துஸ்பிரயோக நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கின்றோம் என ரோகித டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
குறிப்பிட்ட நபர் ஹோட்டலில் பெண்களை இரகசியமாக வீடியோவில் பதிவு செய்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மனைவியின் வளர்ப்பு தந்தையுடன் தங்களிற்கு பல வருடங்களாக எந்த தொடர்புமில்லை என ரோகித்த தெரிவித்துள்ளார்.
எனது மனைவியோ நானோ பல வருடங்களாக அவருடன் தொடர்பிலிருக்கவில்லை என ரோகித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவரே அவரது நடவடிக்கைகளிற்கு பொறுப்பு என தெரிவித்துள்ள ரோகித்த குறிப்பிட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிர்வாகத்தையும் சட்டமொழுங்கு அதிகாரிகளையும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/148022545_1779200868928752_3359727940035988847_o.jpg)
![](https://www.tamilcnn.com/wp-content/uploads/2021/02/148022545_1779200868928752_3359727940035988847_o.jpg)
கருத்துக்களேதுமில்லை