30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி..!

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் கொரோனா தாக்கத்திற்கான அச்சுறுத்தல் அதிகளவில் காணப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 30 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை (26) வெள்ளிக்கிழமை முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி,
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளை அடையாளம் காணுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்ட பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கும், கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரிக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறிப்பிட்ட பகுதிகளில் நிரந்தரமாக மற்றும் தற்காலிகமாக வசிக்கும் 30 வயது மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.